Skip to main content

தமிழக அரசின் இலவச விளையாட்டு பள்ளி விடுதிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு!



தமிழக அரசின் இலவச விளையாட்டு பள்ளி விடுதிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு!

பெற்றோரே!

உங்கள் குழந்தைகளுக்கு விளையாடத் தெரிந்தால் போதும்... தமிழ்நாடு அரசே அவர்களுக்கு வேண்டிய பயிற்சியையும் கொடுத்து, படிக்கவும் வைத்து, இலவச உணவு, விடுதி வசதிகளைத் தருவதோடு மட்டுமின்றி, மாநில, தேசிய, உலக அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க அவர்கள் செலவிலேயே அழைத்துச் செல்வார்கள்.

தலை சிறந்த பயிற்சியாளர்களிடம் நேரடி பயிற்சி எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். மேலும் சத்தான உணவு, முறையான பயிற்சி, உள்ளூர், வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வது என, முழுமையான விளையாட்டு வீரராக உங்கள் பிள்ளையை மாற்றிவிடுவார்கள். இந்த விடுதிகளில் திறமையை வளர்த்துக் கொண்டு இந்திய அணி சார்பில் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, விளையாட்டுத்துறையில் பிரகாசிக்கலாம். 

விளையாட்டு துறையில் பிரகாசிக்கும் போது அரசு வேலை தானாகவே தேடி வரும் என்பது கண்கூடு..

இந்த விடுதிகள்/ பள்ளிகளில் மாணவ மானாவியர்கள் சேர்க்கை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  உறுப்பினர் செயலர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி: மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை. நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதி ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ஆம் வகுப்பு. 8-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வரும் 23.03.2022 (31 மாவட்டத்திற்கும்) அன்றும், 24.3.2022 அன்று 6 மாவட்டத்திற்கும் (செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மற்றும் திருப்பூர்) 25.3.2022 அன்று இராணிப்பேட்டை மாவட்டத்திலும் நடைபெற உள்ளது.

மாணவர்கள்:

1. தடகளம் 

2. இறகுப்பந்து

3. கூடைப்பந்து

4. குத்துச்சண்டை

5. கிரிக்கெட்

6. கால்பந்து

7. வாள்சண்டை 

8. ஜிம்னாஸ்டிக்

9. கைப்பந்து

10. வளைகோல்பந்து

11. நீச்சல்

12. டேக்வாண்டோ

13. கையுந்துபந்து

14. பளுதூக்குதல் 

15. கபாடி

16. மேசைப்பந்து

17. டென்னிஸ்

18. ஜீடோ

19. ஸ்குவாஷ் மற்றும் 

20. வில்வித்தை


மாணவியர்கள்:

1. தடகளம்

2. இறகுப்பந்து

3.கூடைப்பந்து

4. குத்துச்சண்டை

5.கால்பந்து

6. வாள்ச்சண்டை

7.கைப்பந்து

8. வளைகோல்பந்து

9. நீச்சல்

10.டேக்வாண்டோ

11. கையுந்துபந்து

12. பளுதூக்குதல் 

13. கபாடி

14. டென்னிஸ்

15. ஜீடோ மற்றும்

16. ஸ்குவாஷ்.

மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான படிவத்தினை பூர்த்தி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள். 22.03.2022 மாலை 4.00 மணி. 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.



Comments

  1. Replies
    1. நண்பரே தாங்கள் கூறியபடி கபடி என்று சொல் வழக்கில் கூறலாம்.. ஆனால் எழுத்து வழக்கில் கபாடி என்றே குறிப்பிட வேண்டும்.. தூய தமிழில் சடுகுடு என்று அழைக்க வேண்டும்...

      Delete

Post a Comment

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்: கத்தரிக்காய் 46,40 தக்காளி 20,15 வெண்டைக்காய் 46,40 கொத்தவரங்காய் 35,30 சுரைக்காய் 20,18,15 புடலங்காய்  26,24 பாகற்காய் 40,32 பீர்க்கங்காய் 40 முருங்கைக்காய்  -- பூசணிக்காய் 20,14,10 பச்சைமிளகாய் உருட்டு 75,70 அவரைக்காய் (பட்டை) -- தேங்காய் கிலோ 60 சம்பா மிளகாய் -- நைஸ் அவரை -- பெல்ட் அவரை 110 திராட்சை 80 மலை உருளைக்கிழங்கு 45 உருளைக்கிழங்கு பெங்களூர் 35 உருளைக்கிழங்கு ஆக்ரா 35 கருணைக்கிழங்கு 65 சேனை 45 மரவள்ளி கிழங்கு -- வெ.வ.கிழங்கு 55 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 30 புதினா 35 சின்னவெங்காயம் 80,75 பெரியவெங்காயம் பழையது -- பெரிய வெங்காயம் புதியது 45,40 இஞ்சி பழையது -- இஞ்சி புதியது 45 வெள்ளைப்பூண்டு 340,300,280 வாழையிலை ஒரு மடி 25,20 வாழைப்பூ ஒன்றுக்கு 10 வாழைத்தண்டு ஒன்றுக்கு 10 வாழைப்பழம் 60,40,30,25 வாழைக்காய் 25 ஆரஞ்சு 260 பீட்ரூட் 65 நூல்கோல் 40 முள்ளங்கி 22,18 முருங்கைபீன்ஸ் 90,70 பட்டர்பீன்ஸ் 170,150 சோயாபீன்ஸ் -- ரிங்பீன்ஸ் 75 முட்டைகோஸ் 28 கேரட் ஊட்டி 66,50 கேரட் கொடைக்கானல் 36,30 டர்னிப் 40 சவ்சவ் ...