Skip to main content

Posts

Showing posts from December, 2022

டிஜிட்டல் ரீ சர்வே எனும் பயங்கரவாதம்

அமராவதி அணை முதல் மூணாறு வரை... என்ன யோக்கியதையில் கேரளாவிற்கு தூக்கிக் கொடுக்கப்பட்டது?! (டிஜிட்டல் ரீ சர்வே எனும் பயங்கரவாதம்) டிஜிட்டல் ரீ சர்வேயால் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறார் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 1956 மொழிவழி பிரிவினை எத்தனை மோசடியானது என்பதற்கு, உடுமலைப்பேட்டையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் உள்ள அமராவதி அணை முதல், மூணாறு வரை இருக்கும் ஊர்களே சாட்சியாகும். தமிழகத்தில் அன்றைக்கு எத்தனை தாராள மனம் படைத்த ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.ஒரு சின்னஞ்சிறு மாநிலத்தை எத்தனை ஓவியமாக மலையாளிகள் கட்டமைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது, நம்மவர்கள் மீது வெறுப்பு மட்டுமல்ல, வெறியும் ஏற்படுகிறது. அமராவதி அணையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் இரண்டு மாநில எல்லைகளை பிரிக்கும் சின்னாறு சோதனை சாவடி முதலில் வரும். சோதனைச் சாவடியின் மேற்கு புறத்தில் சற்று உள்ளடங்கி இருக்கும் மஞ்சம்பட்டி பள்ளதாக்...

பாளை பல் சமய பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா!

பாளை பல் சமய பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா! 50 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்!! பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்டம் பல் சமய பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா பாளை கிறிஸ்து ராஜா பள்ளி லாரன்ஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது. பாளை கத்தோலிக்க திருச்சபை ஆயர் அந்தோணிசாமி, முஸ்லிம் அனாதைகள் இல்லம் தலைவர் எம்.கே.எம்.கபீர், நெல்லை சர்வ சமய கூட்டமைப்பு தலைவர் பி.டி.சிதம்பரம், பிரம்மா குமாரி புவனேஸ்வரி, ஆகியோர் தலைமை தாங்கினர். பல் சமய பணிக்குழு செயலாளர் பாதிரியார் மை.பா.ஜேசுராஜ் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 50 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்கள் சுயமாக தொழில் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு 14 குடும்பங்களுக்கு 2 ஆட்டு குட்டிகள் வீதம் 28 ஆடுகள், 28 குடும்பங்களுக்கு தலா 10 நாட்டுக் கோழிகள் வீதம் 280 நாட்டுக் கோழிகள், 2 குடும்பங்களுக்கு மாவு அரவை இயந்திரம், 2 குடும்பங்களுக்கு தையல் இயந்திரம், 3 குடும்பங்களுக்கு இஸ்திரி பெட்டி, ஒரு குடும்பத்திற்கு இட்லி வியாபாரம் செய்ய தள்ளுவண்டி வழங்கப்பட்டது. விழாவில் ஆயர்...

👉 ATM கார்டு இல்லாமல்.. ATM-யில் பணம் எடுக்க முடியுமா?

 👉 ATM கார்டு இல்லாமல்.. ATM-யில் பணம் எடுக்க முடியுமா? ஒரு சின்ன ட்ரிக்ஸ்...!! 👇 ATM கார்ட் இல்லாமல் போன் மூலம் நொடியில் பணம் எடுக்கலாம்..! _🏧 பஸ் டிக்கெட் வாங்குவது முதல் மளிகை கடைக்கு சென்று பொருள் வாங்குவது வரை பணப்புழக்கம் அதிகம் இருந்த காலத்திலிருந்து சற்று விலகி தற்போது எங்கு சென்றாலும், என்ன வாங்கினாலும் பணப் பரிவர்த்தனை என்பது மிக எளிதாக மாறிவிட்டது._ 🏧 இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கொடுக்கல், வாங்கல் என பணப் பரிவர்த்தனை அனைத்தும் டிஜிட்டல் மயமாகி உள்ளது. யுபிஐ மூலம் நொடி பொழுதில் ஒருவருக்கொருவர் பணம் அனுப்பியும், பெற்றும் வருகிறோம். 🏧 இருந்தாலும் ஒரு சில இடங்களில், சில நேரங்களில் பணம் ரொக்கமாக தேவைப்படும். அது மாதிரியான சமயங்களில் ஏடிஎம் கார்டின் தேவை இருக்கிறது. _🏧 நம்மிடம்தான் செல்போன் இருக்கிறதே... செல்போன் இருக்கும் தைரியத்தில் பணமும், கார்டுகளும் நம் கையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வருவதே இல்லை. 🏧 இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் சிக்கியிருப்போம். பலர் கடந்தும் வந்திருப்போம். டிஜிட்டல் கட்டண முறைகள் எவ்வளவுதான் மேம்படுத்தப்பட்டு வந்தாலும...