Skip to main content

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை! 

தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!!

சென்னை:

தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

              கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது.

கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும்.

ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்களுக்கும் இடையே மிகுந்த மன அழுத்தத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

பெறப்படும் தகவல்கள் சரியானதா என்பதை உறுதிப்படுத்த அந்தந்த துறை தலைவர்களால் மட்டும் தான் முடியும். அவர்கள் கொடுக்கின்ற விபரங்களை அப்படியே அனுப்புவதால் உறுதித்தன்மையை சரி பார்க்கும் சூழல் கூட கருவூல ஊழியர்களுக்கு இல்லாமல் போகிறது.

கருவூலத்தின் மூலம் பெறப்படும் விபரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே தமிழக அரசால் அடுத்தடுத்த திட்டங்களுக்கு அதை செயல்படுத்த இயலும். 

              IFHRMS என்ற Kalanjiam ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படையான புள்ளி விபரங்கள் மட்டுமே தற்போது வரை தொடந்து கோரப்படுவதும் கடந்த காலங்களில் செய்த அதே டேட்டா பணிகளை தற்போது வரை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யச்சொல்வதும்,

புள்ளி விபரங்களை கோரும் போதும் தரவுகளை பதிவேற்றம் செய்யச்சொல்லும் போதும் உரிய கால அவகாசம் வழங்காமல் இன்றைக்குள் அனுப்ப வேண்டும் நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று ஊழியர்களை கட்டாயப்படுத்துவதும் காரணமாக இருக்கிறது.

               ஆகவே புள்ளி விவரங்களை துறை தலைவர்கள் வழியாகவே கேட்டுப்பெறும்படி எங்கள் சங்கம் சார்பாக தொடர்ச்சியாக பலமுறை வலியுத்தி வருகிறோம்.

ஆனால் மீண்டும் மீண்டும் கூடுதல் இயக்குநர்களின் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் மண்டல இணை இயக்குநர்களின் ஆய்வுக் கூட்டங்கள் வழியாக புள்ளி விபரங்களை சதவீதத்தின் அடிப்படையில் தயார் செய்து கேட்பதும் IFHRMSல் மீண்டும் மீண்டும் தரவுகளை பதிவேற்றம் செய்ய அழுத்தம் கொடுப்பதோடு கருவூல ஊழியர்களை பந்தய குதிரை போல் வேகமாக ஓட நிர்ப்பந்தம் செய்யும் நிகழ்வை முற்றிலும் தவிர்க்குமாறும், தேவைப்படுகின்ற தரவுகளை துறை தலைவர்கள் வழியாக அந்த அலுவலகங்களில் கேட்டுப்பெற வேண்டும் எனவும் IFHRMSல் கடந்த காலங்களில் செய்த பணிகளையே மீண்டும் செய்ய வலியுறுத்துவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக அரசையும் கருவூலத்துறை நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறோம்.

இதே போன்ற நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெறும் எனில் எங்கள் ஊழியர்களை பாதுகாப்பதோடு அல்லாமல் கருவூலத்துறையின் தனித்தன்மையை காக்கவும் எங்களது சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்: கத்தரிக்காய் 46,40 தக்காளி 20,15 வெண்டைக்காய் 46,40 கொத்தவரங்காய் 35,30 சுரைக்காய் 20,18,15 புடலங்காய்  26,24 பாகற்காய் 40,32 பீர்க்கங்காய் 40 முருங்கைக்காய்  -- பூசணிக்காய் 20,14,10 பச்சைமிளகாய் உருட்டு 75,70 அவரைக்காய் (பட்டை) -- தேங்காய் கிலோ 60 சம்பா மிளகாய் -- நைஸ் அவரை -- பெல்ட் அவரை 110 திராட்சை 80 மலை உருளைக்கிழங்கு 45 உருளைக்கிழங்கு பெங்களூர் 35 உருளைக்கிழங்கு ஆக்ரா 35 கருணைக்கிழங்கு 65 சேனை 45 மரவள்ளி கிழங்கு -- வெ.வ.கிழங்கு 55 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 30 புதினா 35 சின்னவெங்காயம் 80,75 பெரியவெங்காயம் பழையது -- பெரிய வெங்காயம் புதியது 45,40 இஞ்சி பழையது -- இஞ்சி புதியது 45 வெள்ளைப்பூண்டு 340,300,280 வாழையிலை ஒரு மடி 25,20 வாழைப்பூ ஒன்றுக்கு 10 வாழைத்தண்டு ஒன்றுக்கு 10 வாழைப்பழம் 60,40,30,25 வாழைக்காய் 25 ஆரஞ்சு 260 பீட்ரூட் 65 நூல்கோல் 40 முள்ளங்கி 22,18 முருங்கைபீன்ஸ் 90,70 பட்டர்பீன்ஸ் 170,150 சோயாபீன்ஸ் -- ரிங்பீன்ஸ் 75 முட்டைகோஸ் 28 கேரட் ஊட்டி 66,50 கேரட் கொடைக்கானல் 36,30 டர்னிப் 40 சவ்சவ் ...