Skip to main content

வேட்பாளர்கள் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன் அனுமதி பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும்.

வேட்பாளர்கள் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன் அனுமதி பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும். 

நாமக்கல் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு அனுமதி தொடர்பான தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் அறிவித்துள்ளார். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர், வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கு  அனுமதி வழங்கவும் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில்வெளியிடப்படும் தேர்தல் குறித்த செய்திகளை கண்காணிக்கவும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலகத்தில் ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்பு குழு (Media Certification and Monitoring Committee) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்பு குழுவினர் மூலம் வழங்கப்பட்ட சான்று எண்ணுடன் கூடிய தேர்தல் விளம்பரங்களை மட்டுமே ஊடகங்கள் வெளியிட வேண்டும். இக்குழுவின் அனுமதி இல்லாத தேர்தல் விளம்பரங்களை நாளிதழ்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடவோ, ஒளிபரப்பவோ கூடாது. இக்குழுவிடம் அனுமதி பெற அரசியல் கட்சியினர், போட்டியிடும் வேட்பாளர்கள் 2 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் குறித்த விளம்பரங்களை வெளியிட அனுமதிகோரி நாளிதழ்கள், தொலைக்காட்சியினர் நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது.

தனிப்பட்ட பிற நபர்கள், கட்சிகள், பிற வேட்பாளர்களின் வாழ்க்கையை விமர்சிக்கும் வகையிலோ விளம்பரங்கள் இருக்கக் தனிப்பட்ட கூடாது. விளம்பரம் தயாரிக்க செலவிடப்பட்ட கட்டணத்துடன், அதன் அளவு உள்ளிட்ட செலவினப் பட்டியலுடன் விண்ணப்பிக்க வேண்டும். அரசு நிர்ணயித்தபடி, விளம்பரத்துக்கான கட்டணம் கணக்கிடப்படும். அனுமதி கோரும் விண்ணப்பத்துடன் விளம்பர வடிவமைப்பு இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் வேட்பாளரின் பெயர், மற்றும் முகவரி, விளம்பரம் தயாரிப்பதற்கான செலவு, விளம்பரப்படுத்த ஆகும் செலவு விவரம், விளம்பரத்தில் உள்ள வாசக விவரம், விளம்பரத்தின் இரண்டு பிரதிகளுடன் வழங்கவேண்டும். அதன் அடிப்படையில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினர் விளம்பரத்தை பார்வையிட்டு அனுமதி  வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்: கத்தரிக்காய் 46,40 தக்காளி 20,15 வெண்டைக்காய் 46,40 கொத்தவரங்காய் 35,30 சுரைக்காய் 20,18,15 புடலங்காய்  26,24 பாகற்காய் 40,32 பீர்க்கங்காய் 40 முருங்கைக்காய்  -- பூசணிக்காய் 20,14,10 பச்சைமிளகாய் உருட்டு 75,70 அவரைக்காய் (பட்டை) -- தேங்காய் கிலோ 60 சம்பா மிளகாய் -- நைஸ் அவரை -- பெல்ட் அவரை 110 திராட்சை 80 மலை உருளைக்கிழங்கு 45 உருளைக்கிழங்கு பெங்களூர் 35 உருளைக்கிழங்கு ஆக்ரா 35 கருணைக்கிழங்கு 65 சேனை 45 மரவள்ளி கிழங்கு -- வெ.வ.கிழங்கு 55 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 30 புதினா 35 சின்னவெங்காயம் 80,75 பெரியவெங்காயம் பழையது -- பெரிய வெங்காயம் புதியது 45,40 இஞ்சி பழையது -- இஞ்சி புதியது 45 வெள்ளைப்பூண்டு 340,300,280 வாழையிலை ஒரு மடி 25,20 வாழைப்பூ ஒன்றுக்கு 10 வாழைத்தண்டு ஒன்றுக்கு 10 வாழைப்பழம் 60,40,30,25 வாழைக்காய் 25 ஆரஞ்சு 260 பீட்ரூட் 65 நூல்கோல் 40 முள்ளங்கி 22,18 முருங்கைபீன்ஸ் 90,70 பட்டர்பீன்ஸ் 170,150 சோயாபீன்ஸ் -- ரிங்பீன்ஸ் 75 முட்டைகோஸ் 28 கேரட் ஊட்டி 66,50 கேரட் கொடைக்கானல் 36,30 டர்னிப் 40 சவ்சவ் ...