Skip to main content

ஐ.டி.ஐ சர்டிபிகேட்டில் திருத்தம் இருந்தால் சரிசெய்து கொள்ளலாம்.

ஐ.டி.ஐ சர்டிபிகேட்டில் திருத்தம் இருந்தால் சரிசெய்து கொள்ளலாம்.

தேனி கலெக்டர் அறிவிப்பு.

தேனி, பிப்., 17:

தொழிற்பயிற்சி சான்றிதழ்களில் உள்ள திருத்தங்களை திருத்த வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அவர்களின் குறிப்பாணையில் 2014. ஆண்டு வரையில் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய தொழிற்பிரிவின் சான்றிதழ்களில் உள்ள திருத்தங்களை அதாவது பயிற்சியாளரின் பெயர். புகைப்பட மாற்றம் மற்றும் பயிற்சியாளரின் தாய், தந்தை பெயர் திருத்தங்கள். பயிற்சி பெற்ற தொழிற் பெயரில் உள்ள திருத்தம் ஆகியவற்றை சரி செய்துகொள்ள 02.03.2022 தேதி வரையில் grievance portalல் விண்ணப்பிக்க கால் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நேரடியாக விண்ணப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பாகும் 

இதனை தொடர்ந்து வேறு ஏதும் வாய்ப்பு வழங்கப்படமாட்டது எனவே தேசிய தொழிற் சான்றிதழில் திருத்தம் கோரும் முன்னாள் அசல் பயிற்சியாளர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள் (பத்தாம் வகுப்பு / பண்ணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து பெற்ற மாற்று சான்றிதழ் (TC), ஆதார்கார்டு, அண்மையில் எடுத்த புகைப்படம் மற்றும் (Affidavit - புகைப்படம் திருத்தம் கோரும் பயிற்சியாளர்கள் மட்டும்) ஆகியவற்றுடன் 02.03.2022 வரை இந்நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 



மேலும் தொடர்புக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம். தேனி தொலைபேசி எண் 9499055765, தொடர்பு கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் தொவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...