Skip to main content

தேனியில் 75-வது ”சுதந்திர திருநாள் - அமுதப் பெருவிழா” பல்துறை பணி விளக்க கண்காட்சி! 7 நாட்கள் நடைபெறும்.

75-வது ”சுதந்திர திருநாள் - அமுதப் பெருவிழா” பல்துறை பணி விளக்க கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, 75-வது ”சுதந்திர திருநாள் - அமுதப் பெருவிழா” பல்துறை பணி விளக்க கண்காட்சியினை இன்று (27.03.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சியினை பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, 75-வது சுதந்திரவிழாவினை முன்னிட்டு, சுதந்திரத்திருநாள் - அமுதப்பெருவிழா தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், செய்திமக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-வது சுதந்திரவிழாவினை முன்னிட்டு, சுதந்திரத்திருநாள் - அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு, பல்துறை பணி விளக்க கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இக்கண்காட்சியில் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றும் வகையில், “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த அறிந்த / அறியப்படாத வீரர்கள் புகைப்படங்கள் மற்றும் தேனி மாவட்டத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த அறிந்த / அறியப்படாத வீரர்கள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. 

மேலும், இக்கண்காட்சியில் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில், காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (27.03.2022) துவக்கி வைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி 02.04.2022 மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு வார காலம் நடைபெறவுள்ளது. மேலும், 29.03.2022 அன்று காலை 7.00 மணயளவில் விழாத்திடல் வளாகத்திலிருந்து, மாவட்ட விளையாட்டு மைதானம் வரையிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே சுதந்திர போராட்ட வரலாறு குறித்து மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி 02.04.2022 அன்று நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. ஒரு வார காலம் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

எனவே, இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றும் வகையில், ஒரு வார காலம் நடைபெறவுள்ள 75-வது ”சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” பல்துறை பணி விளக்க கண்காட்சியில் இடம் பெற்றுள்ள  சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த அறிந்த / அறியப்படாத வீரர்கள் புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து அரங்குகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு, பயனடைய வேண்டும்.

    இக்கண்காட்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே, இ.கா.ப., மாவட்ட வன அலுவலர் ச.வித்யா, இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர்.தண்டபாணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.சக்கரவர்த்தி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சித்தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நா.விஜயகுமார், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா.சண்முகசுந்தரம் அவர்களும், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நா.விஜயகுமார் அவர்களும், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து மிக நல்ல முறையில் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தேனி மாவட்ட கல்வித் துறையினர் பள்ளி மாணவிகளை நேர்த்தியாக தயார்படுத்தி, கலை நிகழ்ச்சிகளை கண்கொள்ளாக் காட்சியாக்கினர். 





75-வது ”சுதந்திர திருநாள் - அமுதப் பெருவிழா” பல்துறை பணி விளக்க கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, 75-வது ”சுதந்திர திருநாள் - அமுதப் பெருவிழா” பல்துறை பணி விளக்க கண்காட்சியினை இன்று (27.03.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சியினை பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, 75-வது சுதந்திரவிழாவினை முன்னிட்டு, சுதந்திரத்திருநாள் - அமுதப்பெருவிழா தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், செய்திமக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-வது சுதந்திரவிழாவினை முன்னிட்டு, சுதந்திரத்திருநாள் - அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு, பல்துறை பணி விளக்க கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இக்கண்காட்சியில் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றும் வகையில், “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த அறிந்த / அறியப்படாத வீரர்கள் புகைப்படங்கள் மற்றும் தேனி மாவட்டத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த அறிந்த / அறியப்படாத வீரர்கள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. 

மேலும், இக்கண்காட்சியில் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில், காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (27.03.2022) துவக்கி வைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி 02.04.2022 மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு வார காலம் நடைபெறவுள்ளது. மேலும், 29.03.2022 அன்று காலை 7.00 மணயளவில் விழாத்திடல் வளாகத்திலிருந்து, மாவட்ட விளையாட்டு மைதானம் வரையிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே சுதந்திர போராட்ட வரலாறு குறித்து மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி 02.04.2022 அன்று நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. ஒரு வார காலம் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

எனவே, இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றும் வகையில், ஒரு வார காலம் நடைபெறவுள்ள 75-வது ”சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” பல்துறை பணி விளக்க கண்காட்சியில் இடம் பெற்றுள்ள  சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த அறிந்த / அறியப்படாத வீரர்கள் புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து அரங்குகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு, பயனடைய வேண்டும்.

    இக்கண்காட்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே, இ.கா.ப., மாவட்ட வன அலுவலர் ச.வித்யா, இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர்.தண்டபாணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.சக்கரவர்த்தி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சித்தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நா.விஜயகுமார், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா.சண்முகசுந்தரம் அவர்களும், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நா.விஜயகுமார் அவர்களும், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து மிக நல்ல முறையில் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தேனி மாவட்ட கல்வித் துறையினர் பள்ளி மாணவிகளை நேர்த்தியாக தயார்படுத்தி, கலை நிகழ்ச்சிகளை கண்கொள்ளாக் காட்சியாக்கினர். 





Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...