Skip to main content

தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் தொடக்கம்!

தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் தொடக்கம்!

தேனி மாவட்டத்தில் ஓய்வுபெற்ற காவலர்கள் ஒன்றிணைந்து காவலர் நலச்சங்கம் தொடங்கியுள்ளனர். சங்கத்தின் ஆலோசகராக ஓய்வுபெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் அறிவானந்தம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவராக நல்லமுத்து, துணைத் தலைவராக தனுஷ்கோடி, செயலாளராக கோவிந்தராஜ் மற்றும் பொருளாளராக இரத்தினசபாபதி ஆகியோர் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

புதிதாக சங்கம் தொடங்கி உள்ள நிலையில், சங்க உறுப்பினர்கள் அனைவரும் கடந்த சனிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே மற்றும் மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளிதரன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து தங்கள் காவலர் நல சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். 

இதுகுறித்து சங்கத்தின் ஆலோசகர் ஓய்வுபெற்ற துணை கண்காணிப்பாளர் அறிவானந்தம் கூறுகையில்; இந்த சங்கம் 23/22 என்கிற எண்ணில் பதிவு செய்யப்பட்ட்டுள்ளது. இந்த சங்கம் ஓய்வு பெற்ற காவலர்கள் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற காவலர்களின் குழந்தைகளின் கல்வி, போட்டித்தேர்வு மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கு வழிகாட்டியாக திகழ்வதோடு பணியில் உள்ள காவலர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவைப்படும் கல்வி, வேலைவாய்ப்புக்கு வழிகாட்டியாக செயல்பட உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து காவல் உட்கோட்டங்களுக்கும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் தலா 4 பேர்களை நியமித்து, அந்தந்த உட்கோட்டங்களுக்குள் உள்ள காவலர்களுக்கு தேவைப்படும் உதவிகளை உடனடியாக செய்ய ஏற்பாடு செய்யப் போவதாகவும் தெரிவித்தார். பேட்டியின்போது சங்க உறுப்பினர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...