தேனி அருகே சிவசேனா கட்சி அலுவலகத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் சிவசேனா கட்சியின் மாவட்டம் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட மகளிரணி அமைப்பாளராக பவானி, தேனி வடக்கு ஒன்றிய தலைவராக முருகன், தேனி மாவட்ட பொதுச்செயலாளர் முருகவேல், தேனி நகர இளைஞரணி செயலாளர் ஜெகதீஸ்வரன், தேனி நகர இளைஞரணி துணை செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட சிவசேனா கட்சி நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் செழியன், மாவட்ட மகளிரணி தலைவர் கோகிலா, மாவட்ட இளைஞரணி செயலாளர் மணி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஈஸ்வரன் ,மாவட்ட பொருளாளர் கணேசன், தேனி மாவட்ட இளைஞர் அணிதலைவர் ஜவஹர் மற்றும் தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விண் சரவணன்




Comments
Post a Comment