தேனி சமூக நலத்துறை அலுவலகத்தில் பட்டப்பகலில் பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு!
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில், திட்ட அலுவலராக ராஜராஜேஸ்வரி வயது 52 என்பவர் பணியாற்றி வருகிறார்.
2015ம் ஆண்டு உமாசங்கர் 56 என்பவர் இதே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த நேரத்தில், அலுவல் பணி கோப்புகள் மறுசீரமைப்பு போன்றவற்றில் செய்த தில்லுமுல்லுக்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வண்ணம் 70b விதிமுறையின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளானார். மேலும் ஒழுங்கு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் அலுவலகத்திற்கு இடம் மாறுதலாக அனுப்பப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, உமாசங்கர் அதிகாரி ராஜராஜேஸ்வரியை பழிவாங்கும் எண்ணத்தோடு ஐந்தாண்டு காலம் காத்திருந்து 30.05.22 அன்று மதியம் ஒரு மணி அளவில் ராஜராஜேஸ்வரி அலுவலகத்திற்கு சென்று முகம் மற்றும் கை தோள்பட்டை போன்ற இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்ப முனைந்தார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் அதிகாரியை அங்கு பணிபுரிந்த அலுவலர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி மற்றும் மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளீதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே, துணை கண்காணிப்பாளர் பால் சுதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து குற்றவாளியை கைது செய்து தேனி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
பெண் அதிகாரி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிட்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தேனியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










Comments
Post a Comment