Skip to main content

தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசு. உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் வேதனை.

தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசு .

உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் வேதனை!

மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் ஐசிசிஆர் விளம்பரத்தில் வெளிநாடுகளில் இந்திய பேராசியர் இருக்கைகள் நிரப்ப விளம்பரம் வெளியாகி உள்ளது.

சமஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, உருது, புத்த மதம் போன்ற பாட பிரிவுகளுக்கான இருக்கைகள் உள்ளன. வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இருக்கைகள் இருந்தன. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது வெறும் 51 இருக்கைகள் மட்டுமே உள்ளன. அதிலும் அதிகபட்சமாக இந்தி, சமஸ்கிருதம் உள்ளன.

 இந்த பட்டியலில் தமிழுக்காக போலந்து நாட்டின் 2 இருக்கைகள் உள்ளன. போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகத்திலும், கிராக்கூப்யாகி எலோனியன் பல்கலைக்கழத்திலும் கடந்த 2014 முதல் பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. இந்த இருக்கைகள் காலியாக இருப்பதற்கு மத்திய அரசு தமிழுக்கு எதிரான மனநிலையில் இருப்பதையே காட்டுகிறது.

 போலந்து நாட்டு தமிழ் இருக்கைகளுக்கு நியமிக்கப்பட்ட பேராசிரியருக்கு 3 ஆண்டுக்கு மேல் பணி வாய்ப்பு கிடைத்தது. பிறகு அப்பணி ஓராண்டாக குறைக்கப்பட்டது. தற்போது இதுவெறும் 9 மாதங்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அங்கு செல்லும் பேராசிரியர்களுக்கு மத்திய அரசால் செய்து கொடுக்கப்படும் வசதிகள் படிப்படியாக குறைக்கப்பட்டு உள்ளன. இதனால் அங்கு பணியாற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் இடையே ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது. இந்த நிலை இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மற்ற பாடப்பிரிவுகளில் இல்லை,


போலந்து நாட்டு மாணவர்கள் தமிழைக் கற்க அதிக ஆர்வம் காட்டுபவர்கள். வார்ஸா பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களில் மாணவிகளே அதிகம் பேர் உள்ளனர். ஆர்வத்தோடு தமிழ் படிக்க வந்தவர்கள் மாணவிகளே அதிகம். மாணவர்கள் இரண்டாமாண்டு படிக்கும் போது தமிழ் மொழியின் அமைப்பையும் இலக்கிய வரலாற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். தமிழை வாசிக்கவும் கற்றுக் கொள்கிறார்கள்.

ஆகவே தற்போது வெளியாகி உள்ள பட்டியலில் போலந்து 2 வருகை தமிழ் பேராசிரியர்கள் இருக்கைகள் இடம் பெற செய்ய மத்திய கலாச்சாரத்துறை தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்மென உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...