Skip to main content

தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கிறித்தவ உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் திருச்சபைகளுக்கு பயன் உள்ளதா? ஆபத்தானதா?

தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கிறித்தவ உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் திருச்சபைகளுக்கு பயன் உள்ளதா? ஆபத்தானதா?

உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் பொருளாளர் & தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் விளக்கம்.

தமிழ்நாடு அரசிடம் கடந்த 2019ம் ஆண்டே கிறித்தவ சமூக செயற்பாட்டாளர்களால் 15 அம்ச கோரிக்கை அடங்கிய மனு (முதல் கோரிக்கையாக உலமாக்கள் நல வாரியம் இருப்பது போன்று திருச்சபை பணியாளர்கள் வாரியம் அமைப்பது, இரண்டாவது 2008ம் ஆண்டே துவங்கப்பட்டு தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிற முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தை போன்று கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் அமைப்பது) அப்போதைய சிறுபான்மை நலத்துறை இயக்குநர் வள்ளலாரிடம் வழங்கப்பட்டது.

அதன்  தொடர்ச்சியாக கடந்த ஆட்சியின் போது 2019 ம் ஆண்டு கிறித்தவ மகளிர் உதவும் சங்கத்தை அப்போதைய அதிமுக அரசு நிறைவேற்றிகொடுத்தது. அரசின் நிதி சுமை, சட்டமன்ற தேர்தல் போன்றவற்றின் காரணமாக பிறதிட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.

தற்போது  திமுக அரசு பதவியேற்று சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை சட்டமன்றத்தில் 08.09.21 அன்று 2021 - 2022 மானியக் கோரிக்கையில் செஞ்சி மஸ்தான் (சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்) அறிவிப்பு வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக மாநில அரசு கடந்த 22.5.22 அன்று அரசு ஆணை (நிலை) எண்.39 ன் படி ஆணை வெளியிடப்பட்டது.

உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் திருச்சபை போதகர்கள் தங்களுடைய திருச்சபை பணியாளர்களை உறுப்பினர் ஆக சேர்த்து, ஏழ்மை நிலையில் உள்ள திருச்சபை பணியாளர்கள் அரசின் நலத் திட்டங்களை பெற்று பயன் பெற உதவ முடியும்.

ஒரு திருச்சபை போதகர் தனது திருச்சபையில் உள்ள அதிகப்பட்சமாக 6 பணியாளர்களை வாரியத்தில் உறுப்பினர்களாக இணைக்க பரிந்துரை செய்யலாம்.

வாரியத்தில் உறுப்பினர்களாக இணைபவர்கள் திருச்சபைகளில் பணியாற்றும் உபதேசியார்கள் (சிஎஸ்ஐ திருச்சபையில் உள்ள  பணியாளர்களின் பெயர்) வேதியர்கள் (கத்தோலிக்க திருச்சபையில் உள்ள பணியாளர்களின் பெயர்) பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், திருச்சபை பணியாளர்கள், தூய்மை  பணியாளர்கள், திருச்சபைகளால் நடத்தப்படுகிற அனாதை இல்லங்கள், காப்பகங்கள் போன்றவற்றில் முறையான ஊதியம் இல்லாமல் பணியாற்றும் பணியாளர்கள், ஆகியோர் வாரியத்தில் உறுப்பினர்களாக இணைய தகுதி உடையவர்களாவர்.

வாரியத்தில் உறுப்பினர்களாக இணைந்தால் தமிழகத்தில் உள்ள ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நல உதவித் திட்டங்கள் போன்று விபத்து நிவாரணம், கல்வி உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம், போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருச்சபை பணியாளர்கள் நல வாரியம் மூலம் பெற்று பயன் அடையலாம்.

முக்கியமாக இந்த பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய தமிழக அரசால் பல்வேறு திருச்சபைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

சி.எஸ்.ஐ திருச்சபை, ஆர்.சி திருச்சபை, தமிழ் இவாஞ்சலிக்கல் லூத்ரன் திருச்சபை,  இந்தியன் இவாஞ்சலிக்கல் திருச்சபை, மெத்தடிஸ் திருச்சபை, அட்வன்த் திருச்சபை, இவாஞ்சலிக்கன் திருச்சபை இந்தியா, மார்தோமா சிரியன் திருச்சபை, சிரியன் ஆர்தோடக்ஸ் திருச்சபை, பாப்டிஸ்த் திருச்சபை, இரசண்ய சேனை திருச்சபை, சினாட் ஆப் பெண்டகோஸ்டல் திருச்சபை ஆகிய திருச்சபைகளை சார்ந்த பேராயர்கள் பரிந்துரைக்க வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணையில் இல்லாத பெரிய திருச்சபைகள் ஏதேனும்  இருந்தால் அந்த திருச்சபை பணியாளர்கள் வாரியத்தில் சேருவதற்கு வாய்ப்பு இல்லை எனவும்  எங்களது திருச்சபையையும் அரசு ஆணையில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகிறார்கள். அப்படி அரசு செய்ய முடியுமானால் தமிழகத்தில் தனி திருச்சபை மற்றும் டயோசிஸ் என நடத்தும் ஆயிரகணக்கான பேராயர்களை அரசு ஆணையில் இணைக்க வேண்டும். ஆயிரக்கணக்கான பேராயர்கள் தமிழகத்தில் இறைப்பணி செய்து வருகிறார்கள். எனவே அரசு முறைப்படி இயங்கும் திருச்சபைகளை மட்டும் அரசு ஆணையில் இணைத்து, அரசு ஆணை வெளியிட்டுள்ளார்கள். எனவே அரசு ஆணையில் இல்லாத திருச்சபை பணியாளர்கள் வாரியத்தில் இணைய முடியாது என்ற ஒரு தவறான தகவலை அரசு ஆணையில் இல்லாத தனி திருச்சபை  பேராயர்கள் பரப்பி வருவது வருத்தத்திற்குரிய விஷயம். அந்த திருச்சபையின் பணியாளர்கள் அந்த திரு ச்சபையின் தலைமை போதகரிடமோ, பேராயரிடமோ கையொப்பம் பெற்று பரிந்துரை கடிதமும் பெற்று வாரியத்தில் உறுப்பினராக இணைவதற்கு வழி வகை உள்ளது. எனவே அரசு ஆணையில் உள்ள திருச்சபை சார்ந்த பணியாளர்கள் மட்டுமே இணைய முடியும் என்ற தவறான பார்வையில் உள்ள போதகர்கள், பேராயர்கள் தங்களுடைய திருச்சபையில் உள்ள ஏழ்மை நிலைமையில் உள்ள பணியாளர்கள் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 

மேலும் வாரியம் திருச்சபை பணியாளர்கள் பயன் அடைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் தான் அரசு செயல்படுத்தி உள்ளது. 

ஆனால் அரசு ஆணையில் இல்லாத திருச்சபை பேராயர்கள், போதகர்கள் தங்களையும் வாரியத்தில் உறுப்பினர்களாக இணைவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சபை சார்ந்த பணியாளர்கள் மட்டுமே வாரிய உறுப்பினர்களாக பதிவு செய்ய முடியும் ஏழ்மை நிலையில் உள்ள பணியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளவே இந்த வாரியத்தை அரசு ஏற்படுத்தி உள்ளது. தனி திருச்சபை நடத்தும் பேராயர்கள், போதகர்கள் இந்த வாரியத்தில் இணைந்து அரசின் திட்டங்களை பெற்று பயன் அடைய தடை இல்லை என்பதை முதலில் அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

வாரியத்தில் பதிவு செய்தால் திருச்சபைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட போவதில்லை. வாரியத்தில் உறுப்பினர்களாக இணைவது உங்களுடைய திருச்சபை பணியாளர் மட்டுமே. அந்த பணியாளர்  அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு தாங்கள் மூலம் பரிந்துரைக்கப்படுவது மட்டும் தான். இதன் மூலம் திருச்சபைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட போவதில்லை. வாரியத்தில் பணியாளர்கள் உறுப்பினர்களாக இணைவதற்கு அந்த  திருச்சபைக்கு அரசின் அனுமதி தேவை என்ற விதியும் இல்லை. திருச்சபை நடத்தும் அனைத்து போதகர்களின் பணியாளர்கள் வாரியத்தில் உறுப்பினர் ஆக முடியும்.

சிறிய திருச்சபை, அல்லது ஜெபவீடு நடத்தி வரும் ஒற்றை போதகர் அவரே போதகராகவும், சபையின் பணியாளராகவும் இருக்கும் பட்சத்தில் அந்த ஒற்றை போதகரும் பெந்தேகோஸ்தே ஐக்கியத்தின் மாவட்ட பொறுப்பாளரால் பரிந்துரைக்கப்பட்டு வாரியத்தில் இணைந்து அரசின் நலத்திட்டங்களை பெற்று கொள்ளலாம்.

வாரியத்தில் இணைய வயது வரம்பு 18 வயது பூர்த்தி செய்து 60 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.

கிறித்தவ மதத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

திருச்சபை, ஜெபவீடு போன்றவற்றில் குறைந்தது ஏழு ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும்.


எனவே தமிழ்நாடு அரசால் கிறித்தவ திருச்சபை பணியாளர்கள் பயன்படக்கூடிய வகையில் ஏற்படுத்தி கொடுத்துள்ள உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் திருச்சபை பணியாளர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. வாரியத்தை ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கு அனைத்து திருச்சபை பேராயர்கள், போதகர்கள், பணியாளர்கள் சார்பில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என ஜெபசிங் தெரிவித்துள்ளார்.







Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...