Skip to main content

"ஆவினில் முறைகேடாய் பணியில் சேர்ந்தவர்களை தமிழக அரசு காப்பாற்றுகிறதா..?" -பால் முகவர்கள் சங்கம் கேள்வி.

"ஆவினில் முறைகேடாய் பணியில் சேர்ந்தவர்களை தமிழக அரசு காப்பாற்றுகிறதா..?" -பால் முகவர்கள் சங்கம் கேள்வி.


ஆவினில் முறைகேடாய் பணியில் சேர்ந்தவர்களை தமிழக அரசு காப்பாற்றுகிறதா என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த அதிமுக ஆட்சியின் போது மதுரை, தேனி, விருதுநகர், திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட ஆவினின் பல்வேறு ஒன்றியங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக பணி நியமனம் நடைபெற்றதும், அவ்வாறு முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 236பணி நியமனங்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் Pஅவ்வாறு கூறி ஓராண்டுகளுக்கு மேலாகியும் கூட ஒரு பணியிடத்திற்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவர் கூட இதுவரை பணிநீக்கமோ, பணியிடை நீக்கமோ செய்யப்படவில்லை எனவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பால் இயங்கி வரும் ஆவினின் வாழ்வாதாரத்தை ஊழல் அதிகாரிகள் சிதைத்து வருவதாகவும் ஆவினில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள் குமுறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அவரை கைது செய்ய இந்தியா முழுவதும் தமிழக காவல்துறை வலைவீசி தேடி ஒருவழியாக கைது செய்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் மீதான வழக்குகளும், நடவடிக்கைகளும் இதுவரை என்ன ஆனதென்றே தெரியவில்லை. அத்துடன் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆவினில் உள்ள ஊழல் பெருச்சாளிகளும், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட  எவரும் தப்பிக்க முடியாது என கர்ஜித்தவர்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தை தங்களின் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் ஆவினில் இளநிலை செயலாளராக பணியாற்றி வரும் அதிகாரிகள் சிலர் புதுக்கோட்டை ஆவினில் மேலாளர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி கன்னியாகுமரியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரிடம் சுமார் 30லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக ஒரு சில நாட்களுக்கு முன் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவினில் ஏற்கனவே பணி நியமனம், இயந்திர தளவாடங்கள், பிளாஸ்டிக் கவர், பால் கொள்முதல் என கடந்த காலங்களில் மட்டுமின்றி தற்போதும் தமிழகம் முழுவதும் ஆவின் ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தியும் கூட இதுவரை ஒரு முறைகேடுகள் தொடர்பாக கூட நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆவினும், முறைகேடுகளும் நகமும், சதையும் போல ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து ஊழல், முறைகேடுகள் ஆவினில் தவிர்க்க முடியாத சக்தியாக, தொடர்கதையாக இருப்பது குற்றம் செய்தவர்களை தமிழக அரசே காப்பாற்றுகிறதோ..? என்கிற சந்தேகம் வலுவாக எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

கடந்த காலங்களிலும், தற்போதும் தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொண்டு ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தவர்களையும், அதற்கு துணை நின்று அதிகார துஷ்பிரயோகம் செய்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களையும் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். அத்துடன் கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக பணியில் சேர்ந்த 236பேர் மட்டுமின்றி தற்போதைய ஆட்சியிலும் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களையும் உடனடியாக பணி நீக்கம் செயவதோடு, இதுவரை அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தையும் திரும்பப்பெற வேண்டும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்: கத்தரிக்காய் 46,40 தக்காளி 20,15 வெண்டைக்காய் 46,40 கொத்தவரங்காய் 35,30 சுரைக்காய் 20,18,15 புடலங்காய்  26,24 பாகற்காய் 40,32 பீர்க்கங்காய் 40 முருங்கைக்காய்  -- பூசணிக்காய் 20,14,10 பச்சைமிளகாய் உருட்டு 75,70 அவரைக்காய் (பட்டை) -- தேங்காய் கிலோ 60 சம்பா மிளகாய் -- நைஸ் அவரை -- பெல்ட் அவரை 110 திராட்சை 80 மலை உருளைக்கிழங்கு 45 உருளைக்கிழங்கு பெங்களூர் 35 உருளைக்கிழங்கு ஆக்ரா 35 கருணைக்கிழங்கு 65 சேனை 45 மரவள்ளி கிழங்கு -- வெ.வ.கிழங்கு 55 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 30 புதினா 35 சின்னவெங்காயம் 80,75 பெரியவெங்காயம் பழையது -- பெரிய வெங்காயம் புதியது 45,40 இஞ்சி பழையது -- இஞ்சி புதியது 45 வெள்ளைப்பூண்டு 340,300,280 வாழையிலை ஒரு மடி 25,20 வாழைப்பூ ஒன்றுக்கு 10 வாழைத்தண்டு ஒன்றுக்கு 10 வாழைப்பழம் 60,40,30,25 வாழைக்காய் 25 ஆரஞ்சு 260 பீட்ரூட் 65 நூல்கோல் 40 முள்ளங்கி 22,18 முருங்கைபீன்ஸ் 90,70 பட்டர்பீன்ஸ் 170,150 சோயாபீன்ஸ் -- ரிங்பீன்ஸ் 75 முட்டைகோஸ் 28 கேரட் ஊட்டி 66,50 கேரட் கொடைக்கானல் 36,30 டர்னிப் 40 சவ்சவ் ...