புஞ்சைபுளியம்பட்டியில் 75 வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 2000 மீட்டர் நீளமுள்ள இந்திய தேசிய கொடி கையில் ஏந்தி மாணவ மாணவியர்கள் அணிவகுப்பு!
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திய தாய் திருநாட்டின் 75 வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு 2000 மீட்டர் நீளம் கொண்ட இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி மாணவ மாணவியர்கள் அணிவகுத்தனர்.
2000 மீட்டர் நீளம் கொண்ட மூவர்ண இந்திய தேசிய கொடியை ஸ்ரீ தேனு சாரீஸ் அண்ட் சில்க்ஸ் நிறுவனத்தினர் வடிவமைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ராணி லட்சுமி அன்பு தலைமை தாங்கினார். விடியல் அறக்கட்டளை நிர்வாகிகள் வாணி தர்மராசு, லோகநாதன், சதீஷ்குமார், ரமேஷ் குமார், பவானிசாகர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட தலைவர் உஷாராணி, புஞ்சைபுளியம்பட்டி போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் வேலு, செயலாளர் கணேஷ், இளந்தென்றல் ஆம்புலன்ஸ் டிரஸ்ட் கதிர், புஞ்சை ஸ்போர்ட்ஸ் ஸ்கேட்டிங் அகாடமி நிறுவனர் பிரபு, காந்தி கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல் நிகழ்வாக 75 வது சுதந்திர தின பவள விழா ஜோதியை கையில் ஏந்தி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. மராத்தான் நிகழ்வை விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் ஜெயகாந்தன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கெ.ஓ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முதல்வர் கோப்பை வென்ற ஹாக்கி வீராங்கனைகள், மாவட்ட, மாநில அளவில் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் மற்றும் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பொதுத்தேர்வு, அறிவியல் கண்காட்சி , தனித்திறன் உள்பட பல துறைகளில் சாதனை படைத்த மாணவ மாணவியர்கள் சுதந்திர தின ஜோதியை கையில் ஏந்தி தொடர் ஓட்டத்தில் பங்கேற்றனர். மராத்தான் ஓட்டம் ஸ்ரீதேவி திரையரங்கம் அருகில் துவங்கி சத்தி மெயின் ரோடு, அண்ணாமலையார் கோவில் சென்று மீண்டும் பேருந்து நிலையம் வந்து முடிவடைந்து.

அதனைத் தொடர்ந்து 75 ஆவது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையிலும் மாணவ மாணவர்களிடையே தேசப்பற்று, ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் புஞ்சை புளியம்பட்டி ஸ்ரீதேவி திரையரங்கம் முதல் அண்ணாமலையார் கோவில் வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு 2000 மீட்டர் நீளம் கொண்ட மூவர்ண இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் அணிவகுத்தனர். இந்நிகழ்ச்சியில் புஞ்சைப் புளியம்பட்டி அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ் ஆர் சி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ் என் ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாணக்யா இன்டர்நேஷனல் பள்ளி, ஸ்பிரிங்டல் பப்ளிக் பள்ளி, சிந்தாமணி வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளி, ஸ்ரீ அகிலா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளி, சிவசக்தி பிளே ஸ்கூல், காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி காந்தி பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றின் நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், புஞ்சைபுளியம்பட்டி போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் நல சங்க உறுப்பினர்கள், இளந்தென்றல் ஆம்புலன்ஸ் டிரஸ்ட் உறுப்பினர்கள், புஞ்சைபுளியம்பட்டி ஸ்போர்ட்ஸ் ஸ்கேட்டிங் அகாடமி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சமூக நல ஆர்வலர்கள் உள்பட சுமார் 1500 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சிறப்பு வாய்ந்த 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மிக நீண்ட இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியது பெருமை மிக்க தருணம் என்றும் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வதாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் சமூக நல அறக்கட்டளை தலைவர் எஸ். ஜெயகாந்தன் தலைமையில் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.
வீடியோ👇
Comments
Post a Comment