Skip to main content

தமிழக கிறித்தவ திருச்சபை மக்கள் அரசுக்கு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டி கருத்துக்களை பதிவு செய்ய உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் வேண்டுகோள்!

தமிழக கிறித்தவ திருச்சபை மக்கள் அரசுக்கு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டி கருத்துக்களை பதிவு செய்ய உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் வேண்டுகோள்!


தமிழக கிறித்தவ திருச்சபை மக்கள் அனைவரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டி கருத்துக்களை பதிவு செய்ய உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் வேண்டுகோள்.

உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு தரப்பட்ட மக்கள் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் பணத்தை இழந்து இதுவரை 28 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு  உயிர் இழந்து உள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், பொது நல இயக்கங்கள் , பொதுமக்கள் மற்றும் உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக அரசு சார்பாக ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய / ஒழுங்குபடுத்த தொடர்பாக கருத்துக்களை பகிர விரும்பும் பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர் மாணவிகள், சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க homesec@tn.gov.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 12.8.2022க்குள் தெரிவிக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


எனவே தமிழகத்தில் உள்ள கிறித்தவ மக்கள் அனைவரும் இளைஞர்களையும், மாணவர்களையும், தவறான வழியில் மூளைச்சலவை செய்து, அதிக ஆசையை பொது மக்களிடம் தூண்டும் விதமாக விளம்பரங்கள் செய்து தீய வழியில் கொண்டு சென்று தங்களது வாழ்க்கையையே அழிவுப் பாதைக்கு கொண்டு சென்று இறுதியில் உயிரை மாய்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் ஆன்லைன் விளையாட்டை முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழக ஓட்டு மொத்த கிறித்தவ மக்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை 12ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments

  1. Rummy vendam and add close pannunke delete this add actor sarathkumar video and other actors videl

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்: கத்தரிக்காய் 46,40 தக்காளி 20,15 வெண்டைக்காய் 46,40 கொத்தவரங்காய் 35,30 சுரைக்காய் 20,18,15 புடலங்காய்  26,24 பாகற்காய் 40,32 பீர்க்கங்காய் 40 முருங்கைக்காய்  -- பூசணிக்காய் 20,14,10 பச்சைமிளகாய் உருட்டு 75,70 அவரைக்காய் (பட்டை) -- தேங்காய் கிலோ 60 சம்பா மிளகாய் -- நைஸ் அவரை -- பெல்ட் அவரை 110 திராட்சை 80 மலை உருளைக்கிழங்கு 45 உருளைக்கிழங்கு பெங்களூர் 35 உருளைக்கிழங்கு ஆக்ரா 35 கருணைக்கிழங்கு 65 சேனை 45 மரவள்ளி கிழங்கு -- வெ.வ.கிழங்கு 55 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 30 புதினா 35 சின்னவெங்காயம் 80,75 பெரியவெங்காயம் பழையது -- பெரிய வெங்காயம் புதியது 45,40 இஞ்சி பழையது -- இஞ்சி புதியது 45 வெள்ளைப்பூண்டு 340,300,280 வாழையிலை ஒரு மடி 25,20 வாழைப்பூ ஒன்றுக்கு 10 வாழைத்தண்டு ஒன்றுக்கு 10 வாழைப்பழம் 60,40,30,25 வாழைக்காய் 25 ஆரஞ்சு 260 பீட்ரூட் 65 நூல்கோல் 40 முள்ளங்கி 22,18 முருங்கைபீன்ஸ் 90,70 பட்டர்பீன்ஸ் 170,150 சோயாபீன்ஸ் -- ரிங்பீன்ஸ் 75 முட்டைகோஸ் 28 கேரட் ஊட்டி 66,50 கேரட் கொடைக்கானல் 36,30 டர்னிப் 40 சவ்சவ் ...