வள்ளலார் 200 வது ஆண்டு முப்பெரும் விழா.தமிழக அரசு அரசாணை வெளீயிடு. உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் வரவேற்பு.
வள்ளலார் 200 வது ஆண்டு முப்பெரும் விழா. தமிழக அரசு அரசாணை வெளீயிடு.
உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் வரவேற்பு.
பசிப்பிணி தான் மனிதனுக்கு பெரும் பிணி ஆதலால் பசியாற்ற உணவளிப்பதே உயர்ந்த அறம் என்று நாள்தோறும் அணையாத அடுப்பெரிய செய்து காலமெல்லாம் அன்னதானம் அளிக்கும் அரும்பணியை தொடங்கியவர் அருட்பிரகாச வள்ளலார்.
1867 ஆம் ஆண்டில் வடலூர் அருகே பார்வதிபுரம் என்னும் கிராமத்தில் சமரச சுத்த சன்மார்க்க தரும சாலையை நிறுவினார். சாதி, மதம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஏழை, பணக்காரன் என எந்த பாகுபாடின்றி அனைவருக்கும் அன்னதான பணி இப்போது வரை 153 ஆண்டுகளுக்கு மேலாக அணையாமல் எரிந்து மக்களின் பசிப்பிணியை தீர்த்து வருகிறது.
வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவர் பேசிய கருத்துக்கள் அனைத்தும் முற்போக்கானது. சாதி, மத வேறுபாடுகள் கூடாது, மதவெறி கூடாது, இறந்தவர்களை எரிக்க கூடாது, சமாதிவைத்தல் வேண்டும் என கூறினார். இதனால் அனைத்து தரப்பிலிருந்தும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார். 19ம் நூற்றாண்டிலேயே சமூக நீதி, சமத்துவ, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை சாதியொழிப்பு கருத்துக்களை முதன் முதலில் பேசியவர் வள்ளலார். அவருடைய சிந்தனைகள் பல்வேறு துறை சார்ந்து விரிந்து நிற்கின்றன.
200 வது ஆண்டு விழாவை முப்பெறும் விழாவாக கொண்டாட சிறப்பு குழு அமைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் சார்பாக தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் அறிக்கையில் தெரிவித்துள்ளார்


Comments
Post a Comment