Skip to main content

தாமரை குளத்தில் ஜடா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானம்

தாமரை குளத்தில் ஜடா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானம்! 

தேனி மாவட்டம் தாமரைக் குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட தாமரை குளத்தில் ஜடா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முனீஸ்வரன் தரிசனம் பெற்றுச் சென்றனர். இதில் குறிப்பாக ஜடா முனிஸ்வரர் பூசாரி பாண்டி வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அருள்வாக்கு கூறுவார். இதில் ஏராளமானவர்கள் பயன் பெற்று வருகின்றனர். தாங்கள் தங்களின் குறைகளை பூசாரியிடம் அருள்வாக்கு கொடுக்கும் போது கூறுகின்றனர். அவர்கள் குறைகள் நிவர்த்தி அடைவதாக பெண்களும்' குடும்பத்தினரும் கூறுகின்றனர். எனவே ஜடா முனீஸ்வரரை பக்தியோடு வணங்கி வருகின்றனர். 


ஆலயம் எழுப்பி ஏழு வருடங்கள் ஆகிறது. இந்த பூசாரியின் தந்தை பெரியசாமி, எட்டு தலைமுறையாக அந்த ஊரில் வசித்து வருகிறார். வெள்ளைக் கரட்டான் முனியாண்டி கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த ஜடாமுனிஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஜடாமுனிஸ்வரருக்கு பொதுமக்கள் சுருட்டு, கோழி, ஆடு போன்றவைகளை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். அவ்வாறு வரும் கோழி ஆடுகளை பொது மக்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர். 


ஜடாமுனிஸ்வரன் அருளை பெறுவதற்காக அருகில் உள்ள கிராமத்தினர் வெள்ளி செவ்வாய் அன்று பூஜை செய்வதற்கு வருவதுண்டு. ஆகவே நாம் சென்று விசாரித்ததில் பலதரப்பட்ட மக்கள் தங்களது குறைகளை ஜடாமுனிஸ்வரனிடம் விட்டுச் செல்வதாக கூறினர். அவரும் அதை நிறைவேற்றி தருவதாக நம்புகின்றனர்.

-கலாம் சரவணன்













Comments

  1. ஜடாமுனிஸ்வரன் அருள் கிடைக்க வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...