தேனி மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா!
தேனி (கிழக்கு) மாவட்ட பெரியகுளம் ஒன்றிய தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா
மற்றும் சமத்துவ நாள் விழாவில்,
காலை: 10:30 மணிக்கு பெரியகுளம் ஸ்டேட் பேங்க் திடலில் இருந்து பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் வரை
மோடி அரசையும் சனாதனத்தையும் எதிர்த்து
தமிழ்ப் புலிகளின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
பெரியகுளம் ஒன்றிய செயலாளர்
சின்னமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
பெரியகுளம் ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
சிறப்புஅழைப்பாளராக தேனி மாவட்ட இளம் புலிகள் அணி செயலாளர் பாலா(எ)தமிழரசு கலந்து கொண்டார்.
பெரியகுளம் நகர செயலாளர் பாண்டியராஜ் நன்றி உரையாற்றினார்.
கள்ளிப்பட்டி, டீ .வாடிபட்டி, கைலாசபட்டி, குள்ளப்புரம், சருத்துப்பட்டி ஆகிய கிளைகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள்
திரளாக கலந்து கொண்டனர்.
தேனி (கிழக்கு) மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில்
அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா
மற்றும் சமத்துவ நாள் விழா காலை: 10:30 மணிக்கு
அரண்மனை புதூர் விலக்கில் தொடங்கி தேனி நகர் நோக்கி
மோடி அரசையும், சனாதனத்தையும் எதிர்த்து
தமிழ்ப் புலிகளின் புகழ் வணக்க அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
தேனி (கிழக்கு) மாவட்ட செயலாளர் இரா.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்ற அணி வகுப்பில்
கட்சியின் பொருளாளர் சி.பேரறிவாளன் கலந்து கொண்டார். மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்புக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட தமிழ்புலிகளும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment