Skip to main content

இலங்கையில் கடலில் குளித்த திருநெல்வேலி இளைஞர் மரணம். உடலை நெல்லைக்கு கொண்டு வர அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி!

இலங்கையில் கடலில் குளித்த திருநெல்வேலி இளைஞர் மரணம்.. உடலை நெல்லைக்கு கொண்டு வர அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி!

அமைச்சருக்கு கிறித்தவ அமைப்பின் தலைவர்கள் நன்றி.

நெல்லை, மே, 18:

இலங்கையில் மரணம் அடைந்த ஜெயசூர்யாவின் தந்தை கஸ்தூரி ரெங்கன், கிறித்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் செ.சா. ஜெபசிங், தென்னிந்திய திருச்சபை ஆயர் கிப்ஸன் ஜான்தாஸ், இரட்சணீய சேனை மக்கள் தொடர்பு அலுவலர் மேஜர் சீனிவாசன், ஆகியோரை சந்தித்து ஜெயசூர்யா உடலை விரைந்து தமிழ்நாடு கொண்டு வர வேண்டி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை  சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் தெரிவித்ததாவது.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி ரெங்கன். இவர் திருவேங்கடநாதபுரம் கோவிலில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். பெங்களூர் ஐடியில் பணிபுரிந்து வரும் அவருடைய மகன் ஜெயசூர்யா (25) மற்றும் அவருடைய நண்பர்கள் இணைந்து இலங்கை நாட்டுக்கு சுற்றுலா சென்ற சமயத்தில் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி ஜெயசூர்யா மரணம் அடைந்தார். அவருடைய உடலை தமிழ் நாட்டிற்கு கொண்டு வர சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அமைச்சர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தூதரகம் மூலம் உடனடியாக ஜெயசூர்யாவின் உடலை கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். 

ஜெயசூர்யா உடலை நெல்லை கொண்டு வரும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என உறுதி அளித்தார். உடன் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் ஜெயசூர்யா உடலை விரைந்து கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக செய்ய அமைச்சரிடம் வலியுறுத்தி கூறினார். செஞ்சி மஸ்தான், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் ஆகியோர்க்கு ஜெயசூர்யாவின் தந்தை கஸ்தூரி ரெங்கன் மற்றும் உறவினர்கள், கிறித்தவ அமைப்பின் தலைவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர் என கூறினார்.












Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...