Skip to main content

தேனி வருசநாட்டில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் சார்பில் விழிப்புணர்வு முகாம்!

தேனி வருசநாட்டில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் சார்பில் விழிப்புணர்வு முகாம்! 



தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றிய பகுதியான வருசநாட்டில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தை திருமண தடைச்சட்டம், பெண் குழந்தைகள் உயர்நிலைக் கல்வியிலிருந்து மேல்நிலை கல்வி மற்றும் மருத்துவம் பொறியியல் போன்ற உயர்கல்வி பயிலுதல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண் ஆண் பிறப்பு விகிதம், பெண்களுக்கான இரும்புச் சத்து குறைபாடு உள்ளிட்டவை குறித்து வருசநாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ் தலைமையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி  கிராம பகுதியில் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

பின்பு  வருசநாடு தனியார் மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் கலந்து கொண்டு கல்வியைப் பற்றி சிறப்பு உரையாற்றினார். குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு குறித்து சகுந்தலா சிறப்புரையாற்றினார். பெண்களுக்கான மருத்துவம் குறித்து கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மருத்துவ ஒருங்கிணைப்பாளர் சாந்தவல்லி உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

பெண்களுக்கான குற்ற சம்பவங்களும் அது குறித்து சட்ட திட்டங்களையும் பற்றி வருஷநாடு சார்பு ஆய்வாளர் ஜெகநாதன் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் மாணவ மாணவியர், ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...