Skip to main content

தேனி மாவட்ட பாரா மெடிக்கல் லேப் கல்வி நலச்சங்கம் சார்பில் லேப் டெக்னீசியன் நாள் கொண்டாட்டம்:

தேனி மாவட்ட பாரா மெடிக்கல் லேப் கல்வி நலச்சங்கம் சார்பில் லேப் டெக்னீசியன் நாள் கொண்டாட்டம்:  



ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் தினம்  

Laboratory technician Day


தேனி:
இந்தியாவில் மார்ச் 13 ஆம் தேதி ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் தினத்தின் தொடக்கமானது, சுகாதாரத் துறையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆற்றும் முக்கிய பங்கை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் 13 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாள், அவர்களின் துல்லியம், அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்பை அங்கீகரித்து பாராட்டுவதற்கான ஒரு தளமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக வளர்ந்துள்ளது.
பல ஆண்டுகளாக, திரைக்குப் பின்னால் விடாமுயற்சியுடன் செயல்படும் இந்த அறியப்படாத சுகாதாரப் பாதுகாப்பு வீரர்களின் பங்களிப்புகளை எடுத்துக்காட்டுவதற்காக இது அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

துல்லியமான நோயறிதல் முடிவுகளை வழங்குவதன் மூலம் நோயாளி பராமரிப்பில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்தி, ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் தினம் நன்றியுணர்வு நாளாக பரிணமித்துள்ளது.
இது அவர்களின் பணியின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாகவும், சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்துவதாகவும் செயல்படுகிறது.
இந்த சிறப்பு நாள், ஆய்வக வல்லுநர்கள் தங்கள் நோயறிதல் நடைமுறைகளில் மிக உயர்ந்த தர துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையைப் பராமரிப்பதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் தினம் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் நோயாளிகளின் நல்வாழ்வை உறுதி செய்வதில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கிற்கு அஞ்சலி செலுத்துவதாகும்.

தேனியில் லேப் டெக்னீசியன் டே கொண்டாட்டம்

லேப் டெக்னீசியன் நாளை முன்னிட்டு மார்ச் 13 ம் தேதி தேனி பேரா மெடிக்கல் லேப் கல்வி நலச்சங்கம் சார்பாக கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கி விழா இனிதாகக் கொண்டாடப்பட்டது. 

மாநில துணைத் தலைவர் ரஞ்சித், தேனி மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சத்யாவேல், மாவட்டத் தலைவர் சிக்கந்தர் ஒலி, மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் சுருளிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். 

அதனைத் தொடர்ந்து வடபுதுப்பட்டி
அன்பு இல்ல ஆசிரமத்திற்கு சென்று அங்கு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த வருடம் 2025 மார்ச் 13 லேப் டெக்னீசியன் நாள் இனிதாக கொண்டாட தேனி மாவட்ட சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்ததற்காக. பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 



மேலும் தேனி மாவட்ட இந்திய மருத்துவர் சங்க தலைவர் மருத்துவர் ராஜ்குமாரை சங்கத்தின் சார்பாக சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். 


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தேனி மாவட்ட தலைவர் செல்வகுமாரை தேனி மாவட்ட சங்கம் சார்பாக பொறுப்பாளர்கள் சென்று லேப் டெக்னீசியன் டே அன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்தனர்.



Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...