Skip to main content

தேனியில் மாநில அளவில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்!

தேனியில் மாநில அளவில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்!

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் 24.03.2025 திங்கட்கிழமை அன்று  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் ஆடவர் மற்றும் மகளிர் பயிற்சியாளர்களுக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் மதுரை மண்டல இணை இயக்குநர் ஆர்.மகேஸ்வரன்,  வரவேற்புரையாற்றினார். தேனி மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி தலைமையேற்றார்.  மேலும் அவர் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

இன்று (24.03.25) நடைபெற்ற ஆடவர் பயிற்சியாளர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 286 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கைப்பந்து போட்டியில் சேலம் மற்றும் விழுப்புரம் மண்டல அணிகள் மோதின. இதில் விழுப்புரம் மண்டலத்தை சேர்ந்த கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அணி வெற்றி பெற்றது. Carrom (Double ) போட்டியில் சென்னை மற்றும் மதுரை மண்டலத்துக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் சென்னை மண்டலத்தை சேர்ந்த ஆர் கே நகர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் C. நாகராஜ் மற்றும் S. தினேஷ் வெற்றி பெற்றனர்.

சதுரங்க போட்டியில் கோவை மற்றும் மதுரை மண்டலங்கள் போட்டியிட்டன. இதில் கோவை மண்டலத்தை சேர்ந்த செம்போடை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் P. சிநேகன் வெற்றி பெற்றார். Ball Badmiton விளையாட்டு விழுப்புரம் மற்றும் சென்னை மண்டல அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் விழுப்புரம் மண்டலத்தைச் சார்ந்த ஆண்டிமடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் வெற்றி பெற்றனர். 

கால்பந்து போட்டியில் மதுரை மற்றும் கோவை மண்டல அணிகள் மோதின. இதில் கோவை மண்டலத்தை சார்ந்த கூடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் வெற்றி பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து, ஆடவர் குழு விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சேகரன் வரவேற்புரை ஆற்றினார். மதுரை மண்டல பயிற்சி இணை இயக்குனர் மகேஸ்வரன், திருச்சி மண்டல பயிற்சி இணை இயக்குநர் ஜான் போஸ்கோ, ஆண்டிபட்டி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சரவணன், போடி அரசினர் தொழிற்பயற்சி நிலைய முதல்வர் சதீஷ் குமார் மற்றும் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு தலைவர் முனைவர் அரவிந்த் ஆகியோர் வெற்றி பெற்ற பயிற்சியாளர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்கள்.

தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அலுவலர் எம்.அன்பரசன் நன்றியுரை ஆற்றினார்.

அனைத்து ஏற்பாடுகளையும் தேனி அரசு தொழில் பயிற்சி நிலைய ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

மேலும் படங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://drive.google.com/drive/folders/1F5VVlyk0GgNWWXd95eYnP0981UTr-Wtk

தகவல்:
மு.கிருபாவதி,
CoPA பயிற்றுநர்,
அரசு தொழில் பயிற்சி பள்ளி, தேனி.

Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்: கத்தரிக்காய் 46,40 தக்காளி 20,15 வெண்டைக்காய் 46,40 கொத்தவரங்காய் 35,30 சுரைக்காய் 20,18,15 புடலங்காய்  26,24 பாகற்காய் 40,32 பீர்க்கங்காய் 40 முருங்கைக்காய்  -- பூசணிக்காய் 20,14,10 பச்சைமிளகாய் உருட்டு 75,70 அவரைக்காய் (பட்டை) -- தேங்காய் கிலோ 60 சம்பா மிளகாய் -- நைஸ் அவரை -- பெல்ட் அவரை 110 திராட்சை 80 மலை உருளைக்கிழங்கு 45 உருளைக்கிழங்கு பெங்களூர் 35 உருளைக்கிழங்கு ஆக்ரா 35 கருணைக்கிழங்கு 65 சேனை 45 மரவள்ளி கிழங்கு -- வெ.வ.கிழங்கு 55 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 30 புதினா 35 சின்னவெங்காயம் 80,75 பெரியவெங்காயம் பழையது -- பெரிய வெங்காயம் புதியது 45,40 இஞ்சி பழையது -- இஞ்சி புதியது 45 வெள்ளைப்பூண்டு 340,300,280 வாழையிலை ஒரு மடி 25,20 வாழைப்பூ ஒன்றுக்கு 10 வாழைத்தண்டு ஒன்றுக்கு 10 வாழைப்பழம் 60,40,30,25 வாழைக்காய் 25 ஆரஞ்சு 260 பீட்ரூட் 65 நூல்கோல் 40 முள்ளங்கி 22,18 முருங்கைபீன்ஸ் 90,70 பட்டர்பீன்ஸ் 170,150 சோயாபீன்ஸ் -- ரிங்பீன்ஸ் 75 முட்டைகோஸ் 28 கேரட் ஊட்டி 66,50 கேரட் கொடைக்கானல் 36,30 டர்னிப் 40 சவ்சவ் ...