Skip to main content

பத்திர பதிவிற்கு லஞ்சம் வாங்குவதாக ஆண்டிபட்டி சார் பதிவாளரை கண்டித்து போராட்டம் .

பத்திர பதிவிற்கு லஞ்சம் வாங்குவதாக ஆண்டிபட்டி சார் பதிவாளரை கண்டித்து போராட்டம்.

ஆண்டிபட்டி, மார்ச்.25

ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு, கட்டாய லஞ்ச வசூல் செய்வதாக கூறி, ஆண்டிபட்டி சார் பதிவாளரை  கண்டித்து, ஆண்டிபட்டி ரியல் எஸ்டேட்  சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முத்துகிருஷ்ணாபுரம் சாலையில்  ஆண்டிப்பட்டி சார்பதிவாளர்  அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இங்கு  முத்துச்செல்வன் என்பவர் சார் பதிவாளராக இருந்து வருகிறார்.இங்கு  பத்திரப்பதிவு செய்வதில் கட்டாய லஞ்ச வசூல்  செய்வதாக பரவலாக புகார்  எழுந்தது.ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில்  கடந்த சில மாதங்களாக பத்திரப்பதிவு செய்வதற்கு பட்டியல் போட்டு கட்டாய லஞ்ச வசூல் செய்வதாக ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் புகார் தெரிவித்து வந்த நிலையில், ஆண்டிபட்டி சார்பதிவாளர் முத்துசெல்வன் பத்திரப்பதிவு செய்ய ஒரு சென்டிற்கு 25 ஆயிரம் ரூபாயும்,21 சென்ட் நிலம் பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாயும் ,அப்ரூவல் பெறப்பட்ட ஒரு செண்டிற்கு  ஐந்தாயிரம் ரூபாயும் என பட்டியல் போட்டு கட்டாய லஞ்சவசூல் செய்து வருகிறார்.

இதற்காக அலுவலகத்திற்கு வெளியே தனி நபர்களை நியமித்தும் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.இதைக் கண்டித்து இன்று சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கூடிய ஆண்டிபட்டி வட்டார ரியல் எஸ்டேட்  சங்கத்தினர் தலைவர் ஷேட் .பரமேஸ்வரன், செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில்  பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.கட்டாய லஞ்சம் பெறும்  சார்பதிவாளர் முத்து செல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களையும் எழுப்பினார்கள்.இதனால்  ஆண்டிபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில்  பரபரப்பு நிலவியது. மேலும் கட்டாய லஞ்ச வசூல் செய்யும் சார்பதிவாளர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ரியல் எஸ்டேட்  சங்கத்தினர் தெரிவித்தனர். 

செய்திகள் மற்றும் புகைப்படம்: மூத்த பத்திரிகையாளர் ஜான் தவமணி ஆண்டிப்பட்டி.



Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்: கத்தரிக்காய் 46,40 தக்காளி 20,15 வெண்டைக்காய் 46,40 கொத்தவரங்காய் 35,30 சுரைக்காய் 20,18,15 புடலங்காய்  26,24 பாகற்காய் 40,32 பீர்க்கங்காய் 40 முருங்கைக்காய்  -- பூசணிக்காய் 20,14,10 பச்சைமிளகாய் உருட்டு 75,70 அவரைக்காய் (பட்டை) -- தேங்காய் கிலோ 60 சம்பா மிளகாய் -- நைஸ் அவரை -- பெல்ட் அவரை 110 திராட்சை 80 மலை உருளைக்கிழங்கு 45 உருளைக்கிழங்கு பெங்களூர் 35 உருளைக்கிழங்கு ஆக்ரா 35 கருணைக்கிழங்கு 65 சேனை 45 மரவள்ளி கிழங்கு -- வெ.வ.கிழங்கு 55 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 30 புதினா 35 சின்னவெங்காயம் 80,75 பெரியவெங்காயம் பழையது -- பெரிய வெங்காயம் புதியது 45,40 இஞ்சி பழையது -- இஞ்சி புதியது 45 வெள்ளைப்பூண்டு 340,300,280 வாழையிலை ஒரு மடி 25,20 வாழைப்பூ ஒன்றுக்கு 10 வாழைத்தண்டு ஒன்றுக்கு 10 வாழைப்பழம் 60,40,30,25 வாழைக்காய் 25 ஆரஞ்சு 260 பீட்ரூட் 65 நூல்கோல் 40 முள்ளங்கி 22,18 முருங்கைபீன்ஸ் 90,70 பட்டர்பீன்ஸ் 170,150 சோயாபீன்ஸ் -- ரிங்பீன்ஸ் 75 முட்டைகோஸ் 28 கேரட் ஊட்டி 66,50 கேரட் கொடைக்கானல் 36,30 டர்னிப் 40 சவ்சவ் ...