Skip to main content

சின்னமனூர் பகுதிகளில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் செயல்முறை விளக்கம்!

சின்னமனூர் பகுதிகளில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் செயல்முறை விளக்கம்!


தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள எரசக்கநாயக்கனூரில் கிராமப்புற வேளாண்மைப்பணி அனுபவத் திட்டத்தின் கீழ் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் ரா.நந்தினி ஸ்ரீ, சு. நம்ரதா, கு.நிஷா, மூ. நிவேதா, இர. நிவேதா, ப. பவித்ரா, செ. இர பிரதீபா, மா . பிரேமிகா, ரா. பிரித்தியங்கா தேவி, ர. பிரியதர்ஷினி விவசாயிகளுக்குச் சுழல் வெள்ளைப் பூச்சியின் தாக்கம், பாதிப்புகள் மற்றும் அதனைக் குறைக்கும் முறைகள் குறித்துத் துணை வேளாண்மை அலுவலர் தாமோதரன் முன்னிலையில் உழவர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். தாமோதரன் சுழல் வெள்ளைப்பூச்சியின் சேதங்களைப் பற்றி முன்னுரை வழங்க ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது. 


சின்னமனூர் நகராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. அவற்றை தாக்கும் பூச்சிகளில் சுழல் வெள்ளை பூச்சிகள்  அதிகசேதங்களை ஏற்படுத்துகின்றன.இலைகள் மஞ்சள் நிறமாதல், தேன் பணி சுரப்பின் தாக்குதல், கரும்பூசண நோய், உலர்ந்த இலைகள், மகசூல் குறைவு போன்றவை வெள்ளைப் பூச்சி தாக்கத்தின் அறிகுறிகள்.


இவற்றைக் குறைக்கும் முறைகளான மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை  ஏக்கருக்கு எட்டு என்ற எண்ணிக்கையில் கட்டுதல், மைதா கரைசலை (ஒரு கிலோ மைதா + ஐந்து லிட்டர் தண்ணீர் கொண்டு கொதிக்க வைத்து பிறகு 20 லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்) இலைகளில் அடித்தல், ஒலிப்பொறிகளை ஏக்கருக்கு ஒன்று என்ற விகிதத்தில் வைத்தல் மற்றும் 3% வேப்பெண்ணையைத் தண்ணீரில் கலந்து இலைகளில் தெளித்தல், என்காசியா போன்ற ஒட்டுனைகளைத் தென்னந்தோப்பில் வெளியிடுதல் போன்ற கட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் முறைகளைப் பற்றி மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் விளக்கியதுடன் தோட்டத்திற்கு நேரடியாக சென்று செயல்முறை விளக்கமும் செய்துக் காட்டினர். 

விவசாயிகளும் அவர்களிடம் சந்தேகங்களை கேட்க, மாணவிகள் மற்றும் துணை வேளாண்மை அலுவலரும் அதற்குப் பதிலளித்தனர். விவசாயிகளும் அதனை ஆர்வத்துடன் கவனித்தனர்.

Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...