Skip to main content

ஊராட்சிமன்ற செயலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக, பாரதிய ஜனதா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார்

ஊராட்சிமன்ற செயலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக, பாரதிய ஜனதா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளராக கட்சி பணியாற்றி வரும் சில்வார்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி தலைமையில் கட்சி நிர்வாகிகள், 02.04.2025 அன்று சில்வார்பட்டி ஊராட்சிமன்ற செயலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங்கிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருவதோடு பாரதிய ஜனதா கட்சியில் நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து மக்கள் பணியாற்றி வருகின்றேன். தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சில்வார்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்ற செயலராக பணியாற்றி வரும் வீரபத்திரன் என்பவர் பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு பணங்களை கையாடல் செய்து வருகின்றார். இவற்றின் உச்சமாக கல்லூரியில் படித்து வரும் தனது மகன் யோகபாலாஜி என்பவரது பெயரிலும், ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கணினி பிரிவில் பணியாற்றி வரும் சித்ரா மற்றும் பல்வேறு நபர்களது பெயர்களில் போலியாக கணக்கு எழுதி ஊராட்சிமன்ற வளர்ச்சிக்கு வரும் பணங்களை கையாடல் செய்துள்ளார். ஆகவே ஐயா அவர்கள் முறைகேடு செயல்களில் ஈடுபட்டு வரும் சில்வார்பட்டி ஊராட்சிமன்ற செயலர் வீரபத்திரன் என்பவர் மீது துறைரீதியாக நடவடிக்கை மேற்கொண்டும் அவர் மீது பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் ஊர்பொதுமக்கள் சார்பாகவும், பாரதிய ஜனதா சார்பாகவும் தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

ஆட்சியரிடம் மனு அளிக்கும் போது கட்சியின் பொறுப்பாளர்களாகிய, ஒன்றிய பொதுச்செயலாளர் பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், விவசாய அணி ஒன்றிய துணைத்தலைவர் பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

இதுகுறித்து பாஜக நிர்வாகிகளிடம் கேட்ட போது; மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு கொடுத்துள்ளோம். அந்த மனு குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததாக கூறினர்.


Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...