ஊராட்சிமன்ற செயலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக, பாரதிய ஜனதா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார்
ஊராட்சிமன்ற செயலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக, பாரதிய ஜனதா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார்!
தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளராக கட்சி பணியாற்றி வரும் சில்வார்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி தலைமையில் கட்சி நிர்வாகிகள், 02.04.2025 அன்று சில்வார்பட்டி ஊராட்சிமன்ற செயலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங்கிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருவதோடு பாரதிய ஜனதா கட்சியில் நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து மக்கள் பணியாற்றி வருகின்றேன். தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சில்வார்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்ற செயலராக பணியாற்றி வரும் வீரபத்திரன் என்பவர் பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு பணங்களை கையாடல் செய்து வருகின்றார். இவற்றின் உச்சமாக கல்லூரியில் படித்து வரும் தனது மகன் யோகபாலாஜி என்பவரது பெயரிலும், ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கணினி பிரிவில் பணியாற்றி வரும் சித்ரா மற்றும் பல்வேறு நபர்களது பெயர்களில் போலியாக கணக்கு எழுதி ஊராட்சிமன்ற வளர்ச்சிக்கு வரும் பணங்களை கையாடல் செய்துள்ளார். ஆகவே ஐயா அவர்கள் முறைகேடு செயல்களில் ஈடுபட்டு வரும் சில்வார்பட்டி ஊராட்சிமன்ற செயலர் வீரபத்திரன் என்பவர் மீது துறைரீதியாக நடவடிக்கை மேற்கொண்டும் அவர் மீது பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் ஊர்பொதுமக்கள் சார்பாகவும், பாரதிய ஜனதா சார்பாகவும் தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
ஆட்சியரிடம் மனு அளிக்கும் போது கட்சியின் பொறுப்பாளர்களாகிய, ஒன்றிய பொதுச்செயலாளர் பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், விவசாய அணி ஒன்றிய துணைத்தலைவர் பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்
இதுகுறித்து பாஜக நிர்வாகிகளிடம் கேட்ட போது; மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு கொடுத்துள்ளோம். அந்த மனு குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததாக கூறினர்.

Comments
Post a Comment