Skip to main content

Posts

Showing posts from June, 2025

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் டாக்பியா அனைத்து பணியாளர்கள் சங்கம் கோரிக்கை ஆர்பாட்டம்!

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் டாக்பியா அனைத்து பணியாளர்கள் சங்கம் கோரிக்கை ஆர்பாட்டம்! தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் இயங்கி வரும் நியாயவிலைக்கடைகளில் பணிபுரியும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் சந்தித்து வரும் பல்வேறு இடர்பாடுகளை களைவது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை ஆர்பாட்டம் நடத்தி இதன் இறுதியில்  தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 27.06.2025 வெள்ளிக்கிழமை 11.00 மணி அளவில் தேனி மாவட்டத்தில் மாவட்ட தலைவர் K.அருணகிரி தலைமையிலும், மாவட்ட செயலாளர் P.காமராஜபாண்டியன் மற்றும் மாவட்ட பொருளாளர் K. சரவணன் முன்னிலையிலும் மாபெரும் கோரிக்கை ஆர்பாட்டம் நடத்தி தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பும் வகையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் M.காளிப்பாண்டியன், S.செல்லாண்டி, மாவட்ட இ...

காரைக்குடி சம்பவம்; 26.06.25 வியாழன் அன்று மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

காரைக்குடி சம்பவம்; 26.06.25 வியாழன் அன்று மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  சில தினங்களுக்கு முன்பு அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.  இதுகுறித்து  அரசு ஊழியர்கள் சங்கம், மாநில மையம் சார்பில்  மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  வட்டத்திற்கு உட்பட்ட ராமசாமி தமிழ் கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றும் முத்துமாரி என்பவரைத் தாக்கிய அக்கல்லூரியின் தற்காலிக காவலர் பழனியப்பன் மீதும், அவரைத் தூண்டிவிட்ட கல்லூரி முதல்வர்  நாகநாதன் மீதும் அளிக்கப்பட்ட புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...

தேனி உழவர் சந்தையில் 06-06-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 06-06-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்: கத்தரிக்காய் 48,40 தக்காளி 18,15 வெண்டைக்காய் 38,35 கொத்தவரங்காய் 30 சுரைக்காய் 12 புடலங்காய் 42 பாகற்காய் பெரியது 60 குருவித்தலை பாகல் 60 பீர்க்கங்காய் -- முருங்கைக்காய் 85,80,70,40 சர்க்கரை பூசணிக்காய் 12 வெள்ளை பூசணிக்காய் 18 லாடக்காய் -- பச்சைமிளகாய் உருட்டு 110,105,100,80,60 அவரைக்காய் (பட்டை) 75 தேங்காய் கிலோ 63 சம்பா மிளகாய் -- நைஸ் அவரை 85 மலை அவரை 110 பெல்ட் அவரை-- திராட்சை 120,100 புரோகோலி 420 ஆரஞ்சு 200/160 சாத்துக்குடி 70 மலை உருளைக்கிழங்கு -- உருளைக்கிழங்கு இந்தூர் -- உருளைக்கிழங்கு ஆக்ரா 32 கருணைக்கிழங்கு 100 சேனை 65 மரவள்ளி கிழங்கு -- வெ.வ.கிழங்கு -- கறிவேப்பிலை 50 கொத்தமல்லி 55 புதினா 35 சின்னவெங்காயம் 70,68 பெரியவெங்காயம் பழையது 28,26 பெரிய வெங்காயம் புதியது -- இஞ்சி பழையது 50 இஞ்சி புதியது -- வெள்ளைப்பூண்டு 180,140,100,80 வாழையிலை ஒரு மடி 50,40 வாழைப்பூ ஒன்றுக்கு 10 வாழைத்தண்டு ஒன்றுக்கு 10 வாழைப்பழம் 60,50,40,25 முலாம்பழம் 40 வாழைக்காய் 20 பீட்ரூட் 40 நூல்கோல் 55 முள்ளங்கி 40,30 முருங்கைபீன்ஸ் 12...