Skip to main content

தேனி குப்பி நாயக்கன்பட்டி அருகே அரசுக்கு எதிராக சிலர் வீண் போராட்டம்

 பேராசையால், தனியார் நிறுவனத்திடம் அதிக பணம் பிடுங்க வேண்டி 

தேனி குப்பி நாயக்கன்பட்டி அருகே அரசுக்கு எதிராக சிலர் வீண் போராட்டம்!

வீண் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை


தேனி: 

நாட்டின் பல பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் நிறுவப்பட்டு அந்த காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை டவர்கள் மூலம் அரசாங்க துணை மின் நிலையத்திற்கு கொண்டு வந்து நாடு முழுவதும் விநியோகித்து அதன் மூலம் மின்சார பற்றாக்குறை தீர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தனியார் நிலம் வழியாக டவர் கொண்டு செல்லப்படும் போது, அந்தந்த பகுதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ள அரசாங்க வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. 

அரசியல் சாசனப்படி ஒரு நிலம் தனிநபர் பேரில் பட்டா பெற்று இருந்தாலும் அரசாங்கத்திற்கு தேவைப்படும் போது அந்த நிலத்தை அரசாங்கத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. அதற்காக அரசு உரிய இழப்பீடு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

தேனி அருகே குப்பி நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் காற்றாலைகள் அமைக்கப்பட்டு அந்த காற்றாலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக அரசின் அனுமதியுடன் தனியார் நிலங்களில் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சிலரின் தூண்டுதல் காரணமாக டவர் மற்றும் மின்சாரம் கொண்டு செல்ல உள்ள வழியில் உள்ள ரேவதி, பழனிச்சாமி, சுப்புலட்சுமி, பாண்டியராஜ், மனோகரன், லெட்சுமி ஆகிய ஆறு நில உரிமையாளர்களில் சிலர் திடீரென தங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை எனக் கோரி சில தினங்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதன் முன்பு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்று வந்த முகாமில் அதில் சிலர் கலெக்டரிடம் நேராக மனு கொடுத்தபோது கலெக்டர் நீர்நிலை புறம்போக்கு மற்றும் புறம்போக்கு நிலங்களுக்கு நான் சிறப்பு முடிவு எடுக்கலாம். இது பட்டா நிலம் இதற்கு அரசு விதிமுறைகளில் என்ன உள்ளதோ அது பின்பற்றப்படும் என அறிவித்துவிட்டு சென்றதாக தெரிகிறது. 

இந்நிலையில் நேற்று அந்த ஆறு குடும்பத்தினர் அங்கிருந்த சிலரை அழைத்துக் கொண்டு டவரின் கீழ் நின்று போராட்டம் நடத்துவதாக கூறி தேனியில் இருந்து பல பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டி கொடுத்தனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் உரிய இழப்பீடு வழங்காமல் பணி செய்ய நாங்கள் விடமாட்டோம் என அவர்கள் தெரிவித்து பிரச்சினை செய்தனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதியுடன் பணி செய்ய வந்த தனியார் நிறுவனத்தினரை பணி செய்ய விடாமல், டிராக்டர்களை நிறுத்தி பாதைகளை அடைத்தும் அந்தப் பகுதியில் ஒரு வேண்டாத பதட்டத்தை ஏற்படுத்தினர். கண்டமனூர் போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர்கள் வேல்முருகன் மற்றும் பாண்டியம்மாள் தலைமையில் ஊர் அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களோடு அதிகாரிகளும் தனியார் நிறுவன சட்ட ஆலோசர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய இழப்பீடு வழங்க தனியார் நிறுவனம் ஏற்கனவே முன்வந்த நிலையில் தங்களுக்கு பெரிய தொகை வேண்டும் என்று கேட்டு பிரச்சினை செய்வதாக ஊர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நடுவே பரவலாக பேசப்படுகிறது. அதிக பணம் பெற வேண்டும் என்ற பேராசையால் இதுபோன்று தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்கள் மீது அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்: கத்தரிக்காய் 46,40 தக்காளி 20,15 வெண்டைக்காய் 46,40 கொத்தவரங்காய் 35,30 சுரைக்காய் 20,18,15 புடலங்காய்  26,24 பாகற்காய் 40,32 பீர்க்கங்காய் 40 முருங்கைக்காய்  -- பூசணிக்காய் 20,14,10 பச்சைமிளகாய் உருட்டு 75,70 அவரைக்காய் (பட்டை) -- தேங்காய் கிலோ 60 சம்பா மிளகாய் -- நைஸ் அவரை -- பெல்ட் அவரை 110 திராட்சை 80 மலை உருளைக்கிழங்கு 45 உருளைக்கிழங்கு பெங்களூர் 35 உருளைக்கிழங்கு ஆக்ரா 35 கருணைக்கிழங்கு 65 சேனை 45 மரவள்ளி கிழங்கு -- வெ.வ.கிழங்கு 55 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 30 புதினா 35 சின்னவெங்காயம் 80,75 பெரியவெங்காயம் பழையது -- பெரிய வெங்காயம் புதியது 45,40 இஞ்சி பழையது -- இஞ்சி புதியது 45 வெள்ளைப்பூண்டு 340,300,280 வாழையிலை ஒரு மடி 25,20 வாழைப்பூ ஒன்றுக்கு 10 வாழைத்தண்டு ஒன்றுக்கு 10 வாழைப்பழம் 60,40,30,25 வாழைக்காய் 25 ஆரஞ்சு 260 பீட்ரூட் 65 நூல்கோல் 40 முள்ளங்கி 22,18 முருங்கைபீன்ஸ் 90,70 பட்டர்பீன்ஸ் 170,150 சோயாபீன்ஸ் -- ரிங்பீன்ஸ் 75 முட்டைகோஸ் 28 கேரட் ஊட்டி 66,50 கேரட் கொடைக்கானல் 36,30 டர்னிப் 40 சவ்சவ் ...